கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் ராஜாமடம் பாலத்திற்கு அருகே சட்ட விரோதமாக லாரிகள் மூலம் மணலை ஏற்றி செல்கின்றனர்.இதனை கண்டித்து பல முறை அதிகாரிகளிடத்தில் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், அதிவேகத்தில் செல்லும் இந்த லாரிகள் மூலம் பல விபத்துகள் நடந்துள்ளன என்று பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இன்று(17.7.2019) சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த லாரி பாலத்தின் தடுப்புச் சுவரை சேதப்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்துவருகின்றனர்.
ஏற்கனவே மணல் கொள்ளை தொடர்பாக அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மணல் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகளிடத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.