Friday, April 19, 2024

தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்க அரசியல் தலைவர்களுக்கு தடை!

Share post:

Date:

- Advertisement -

பிரச்சாரம் ஓய்ந்ததும், அரசியல் தலைவர்கள் தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

கடந்த சில வாரங்களாக கோடைவெயிலை மிஞ்சும் அளவிற்கு அனல் பறந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இறுதி நாளான இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், பிரச்சாரம் ஓய்ந்ததும், அரசியல் தலைவர்கள் தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைய செயலாளர் என்.டி.பூட்டியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைக்கான 2ம் கட்டத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ளதால், அதன் பிறகு அரசியல் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் தேர்தல் தொடர்பாக பேட்டி அளிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மணிக்குத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பிறகு தேர்தல் தொடர்பாக பேசுவது பிரச்சாரம் மேற்கொள்வதற்கு ஈடானதாக கருதப்படும் என்பதால், இத்தகைய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...