தேசிய நெடுஞ்சாலைகளில் நேரிடும் விபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்கவும், அவசர தேவைகளுக்கும், 1033 என்ற கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்ணை அடுத்த மாதம் முதல் வாரத்தில், மத்திய அரசின் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் விபத்து நேரிட்டவுடன், 1033 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக, விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழு விரைந்து சென்று, மீட்பு பணிகளில் ஈடுபடும். விபத்தில் சிக்கியவர்களுக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர், இதுமட்டுமின்றி, ஆள் அரவம் இல்லாத இடத்தில் வண்டி பழதடைந்தாலோ, அல்லது, வேறு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டாலோ 1033 என்ற எண்ணில் தொடர் கொண்டால் உடனடியாக உதவிகள் வழங்கப்படும்.