Saturday, April 20, 2024

திட்டமிட்டே வஞ்சிக்கப்படும் அதிராம்பட்டினம்.

Share post:

Date:

- Advertisement -

திட்டமிட்டே வஞ்சிக்கப்படும் அதிராம்பட்டினம்

கடந்த வெள்ளிக்கிழமை 16 -11-2018 அன்று கஜா புயலினால் தமிழகத்தின் பெறும்பாலான கடலோர மாவட்டங்கள் பெறும் பாதிப்புக்குள்ளாகியது.

குறிப்பாக கடலோர பகுதியான அதிராம்பட்டினம் 111 கி.மீ வேகத்தின் புயலுக்கு இரையானது ஏறத்தாழ இந்த கிராமம் 90% அழிந்துவிட்டது.

அரசு தரப்பிலிருந்து எந்தவொரு பேரிடர் மீட்பு குழுக்களோ அல்லது அரசு ஊழியர்களோ இதுவரை முற்றிலும் அழிந்த இக்கிராமத்தின் அழிவை ஆய்வு செய்யவோ மீட்பு பணிகளை செய்யவோ முன்வரவில்லை மாறாக திட்டமிட்டே இந்த கிராமம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

புயலினால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்து மக்களுக்கு இதுவரை எந்தவொரு அடிப்படை வாழ்வாதார வசதிகளும் வழங்கப்படவில்லை குறிப்பாக, மருத்துவம், உணவு, குடிநீர், மின்சாரம், போன்றவைகள்.

பச்சிளம் குழந்தைகளும், வயதான முதியவர்களும், பெண்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் சொல்லொணாத் துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர் தொலைதொடர்புகளும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இந்த கிராமமே இருள்சூழ்ந்து காணப்படுகிறது கடந்த மூன்று நாட்களாக.

பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள் உணரவேண்டும், இல்லையேல் உணர்த்தப்படும்.

ஆக்கம் : வஜிர் அலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...