நாடாளுமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அங்கம் வகித்துள்ளனர். மேலும் இக்கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் S.S. பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அதிரை TNTJ நிர்வாகிகளை, திமுகவினர் சந்தித்து SS. பழனிமாணி க்கத்திற்கு ஆதரவு கோரினர். அதிரை ஈசிஆர் சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற சந்திப்பில், அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன், முன்னாள் சேர்மன் அஸ்லம் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளிடம் ஆதரவு தர கோரினர்.