டிசம்பர் 6 பாபர் மசூதி இடித்த நாளையொட்டி பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும், சிறுபான்மை சமுதாயங்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்கக் கோரியும், த.மு.மு.க தலைமையில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இன்று(06/12/2019) வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் தமுமுக சார்பில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்த உரிமை மீட்பு போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தமுமுகவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.