Thursday, April 18, 2024

தமுமுக ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் ! நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சாலை துவரங்குறிச்சியில் நேற்று (02/05/18) புதன்கிழமை பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது சில விரோதிகள் நடத்திய தாக்குதலில் ஓட்டுநர் பலத்த காயத்துடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று (03/05/18) வியாழக்கிழமை தமுமுக சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக, மமக தலைவர் அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் 20க்கு மேற்பட்ட நிர்வாகிகள் சேர்ந்து அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓட்டுநர் ராஜா முஹம்மது அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு பட்டுக்கோட்டை காவல் நிலையம் சென்று உதவி ஆய்வாளரை சந்தித்து தாக்கியவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தினர். உதவி ஆய்வாளரும் குற்றவாளிகள் மீது இரண்டு நாட்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமுமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...