தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் 83வது பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை தஞ்சை எஸ்.என்.எம். கிரீன் பேலஸ் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 150க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தேர்தல் அலுவலர் ஒருவர் மூலம் நடைபெற்ற தேர்தலில் மாநில தலைவராக செ.செ. வில்லவராயர் தேர்வு செய்யப்பட்டார். மாநில துணைத் தலைவர்களாக பாலசுப்ரமணியன், சிவானந்தம், ரவிக்குமார், ராதாகிருஷ்ணன், சுரேஷ் மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாநில பொருளாளராக ராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் இந்த 83வது பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர். மேலும் அதிரையைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.