மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து மக்களைவையில் அதிமுக வாக்களித்தன.
இதனால் அச்சட்டம் பாஸ் செய்யப்பட்டு நாடெங்கிலும் அமல் படுத்த பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் இக்கொடிய சட்டத்தை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
மேலும் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற போராட்ட காரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விளக்கம் தெரிவித்த அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் இப்போராட்டத்தில் கட்சி,இயக்க வேறுபாடுகளின்றி அனைவரும் கலந்துகொண்டு கொடிய சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க கேட்டு கொண்டார்.