Wednesday, April 24, 2024

தமிழகத்திற்கு துணை ராணுவம் வர உள்ளதாக உள்ள தகவல் உண்மையல்ல…!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்திற்கு துணை ராணுவப் படை வர உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல – ராணுவம் விளக்கம்

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி பலர் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

அவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், என்.சி.சி. படையினரும் களமிறக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், அவசரநிலை பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம், சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...