இராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
இதனையடுத்து இன்று இராமநாதபுரம் – கீழக்கரை
ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக காலை 11 மணியளவில் அடிக்கள் நாட்டப்பட்டது.
இந்த ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை
முன்னால் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், போரசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
வெட்டுத் தீர்மானம் வாயிலாகவும்,
சட்டமன்ற கேள்வி நேரத்திலும்
பலமுறை வலியுறுத்தியதன் அடிப்படையில், அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் அதற்கு உரிய நடவடிக்கையை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இதன் பின்னர் ரயில்வே மேம்பாலம் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்ட போது தனியார் நிறுவனம் ஒன்று நீதிமன்றம் மூலம் தற்காலிக தடை ஆணை பெற்று
தற்போது அந்த தடை முற்றிலும் முடிவுக்கு வந்ததால் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.