Thursday, April 18, 2024

தஞ்சாவூர் அருகே தலித்கள் மீது சாதிவெறி கும்பல் தாக்குதல்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் அருகே தலித் கிராமத்தை சாதிவெறிக் கும்பல் தாக்குதல்.

நேற்று முன் தினம் இரவு ஒரத்தநாடு அருகில் உள்ள ஆம்பலபட்டு – தெற்கு குடிக்காடு இந்த கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர்கள் தங்கள் பகுதியில் பலூன் கட்டி கலர் பேப்பர் தோரணம் அமைத்து புத்தாண்டினை கொண்டாடி இருக்கின்றனர்.

இரவு 1 மணி இருக்கும் வேறொரு கிராமத்தை சார்ந்த இளைஞர்கள் கட்டி இருந்த தோரணங்களை சேதப்படுத்தி இருக்கின்றனர்.

நேற்று 1.1.2018 அதிகாலை 2 மணி அளவில் 80 பேர் கொண்ட கும்பல் கத்தி,அருவாள்,உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தலித் குடியிருப்பில் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் 15 -25 வயதினை சேர்ந்தவர்கள்.

சாதியை குறிப்பிட்டு இழிவான வார்த்தைகளால் திட்டி, இட ஒதுக்கீட்டில் படித்து அரசு வேலையில் இருந்து கொண்டு எங்களை முந்த பார்க்கிறீர்களா என்று கூறி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

இந்த தாக்குதலில் 8 பேர் காயம் அடைந்து உள்ளனர்.15 வீடுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.15 இரண்டு சக்கர வாகனங்களும் சேதப்படுத்த பட்டு இருக்கின்றன.

குற்றவாளிகளை கைது செய்ய கூறி தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...