டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை முற்றிலுமாக கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை கார்டினை பயன்படுத்தும் போதும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.
ரூ.17 முதல் ரூ. 25 வரை கட்டணத்துடன் ஜிஎஸ்டி,யும் சேர்த்து வங்கிகள் வசூலிக்கின்றன. எந்த காரணமும் இன்றி, வங்கிகள் கட்டணம் வசூலிப்பதால் டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.
எஸ்பிஐ வங்கி ஒவ்வொரு முறையும் ரூ.17 ம், எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் ரூ.25 ம் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும், பரிவர்த்தனை செய்யும் போதும் பிடித்தம் செய்கின்றன.
வங்கிகளின் இந்த செயல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைக்கு எதிரானது என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.