Saturday, April 20, 2024

ஜெயலலிதா சிலை தானா..? நெட்டிசன்கள் ஆதங்கம்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்க கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து இந்தச் சிலையை திறந்து வைத்திருக்கின்றனர். 7 அடி உயரம் கொண்டதாக இந்த சிலை அமைந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே அதன் நிறுவனர் எம்ஜிஆருக்கு சிலை உண்டு. அதன் அருகேதான் தற்போது ஜெயலலிதாவுக்கும் சிலை திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வெண்கல சிலையை பிரசாத் என்பவர்தான் வடிவமைத்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்க கருத்தை பதிவு செய்து வருகின்றனர். திறக்கப்பட்டது ஜெயலலிதா சிலை போன்றே இல்லை என பலரும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் சிலையை திறப்பதற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் சிலையை திறந்திருப்பதாக ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். மற்றொருவரோ ஜெயலலிதாவின் முகத்தையே மாற்றிவிட்டார்கள். தயவுசெய்து சிலையில் ஜெயலலிதா என எழுதி ஒட்டவும் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு நபரோ இது ஜெயலலிதாவா…? அல்லது சசிகலாவா என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஜெயலலிதாவின் சிலை குறித்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அனலாக பறக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...