Thursday, March 28, 2024

ஜனவரி 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு முடிவு !!!

Share post:

Date:

- Advertisement -

சென்னை : ஜனவரி 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால் மட்டுமே ரேஷன் பொருள் வழங்க வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 1 கோடியே 95 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் (ரேஷன் கார்டு) உள்ளனர். இவர்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளை நவீனமயமாக்கும் வகையிலும், போலி கார்டுகளை நீக்கும் வகையிலும் பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை ரேஷன் கடை ஊழியர்களிடம் வழங்கும்படி அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, ஆதார் எண் வழங்கப்பட்டு வந்ததை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
இதுவரை சுமார் 1.50 கோடி பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 45 லட்சம் பேருக்கு கார்டு வழங்கப்படவில்லை. இதில் 25 லட்சம் பேர், ஸ்மார்ட் கார்டு கோரி தங்கள் ஆதார் எண்ணை ரேஷன் கடையில் சமர்ப்பித்துள்ளனர். ஆனால் மீதம் உள்ள 20 லட்சம் பேர் இதுவரை ஆதார் எண் வழங்கவில்லை. அரசு பலமுறை காலநீட்டிப்பு செய்தும் கூட அந்த 20 லட்சம் பேர் ஆதார் எண் வழங்காமல் உள்ளனர். இதனால் அந்த 20 லட்சம் ரேஷன் கார்டுகளும் போலியாக இருக்கலாம் என்று உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் வரும் ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் அதற்காக ஆதார் எண் வழங்கியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய நவீன ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 90 சதவீதம் பேருக்கு கார்டு வழங்கி விட்டோம். 20 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண் வழங்காமல் உள்ளனர். அவர்களுக்கு பல மாதங்களாக வாய்ப்பு கொடுத்து வந்தும் இணைக்காமல் உள்ளனர். வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஸ்மார்ட் கார்டு இருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. ஆனாலும், அந்த 20 லட்சம் கார்டுகளை உடனடியாக நீக்க மாட்டோம். அவர்களுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகும் ஆதார் எண் வழங்காவிட்டால், அந்த கார்டுகள் அனைத்தும் போலியானவை என அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படும். அப்படி நீக்கப்பட்டால், அரசுக்கு ரேஷன் செலவு மிச்சம் ஆகும். இதன் மூலம் மற்றவர்களுக்கு கூடுதலாக உணவு பொருள் வழங்க முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...