வங்கிச்சேவையின் பாதுக்காப்பை உறுதி படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அதன்படி தானியங்கி காசாலும் (ATM) இயந்திரங்களில் பயன்படுத்த கூடிய அட்டைகளை சிப் அடிப்படையிலான கார்டுகளை வங்கிகள் படிபடியாக வழங்கின.
சுமார் 50℅மக்கள் சிப் அடிப்படையிலான கார்டுகளை பெற்று வங்கி சேவைகளை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் மீதமுள்ள 50℅சதவீத வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சார்ந்த வங்கிகளில் பழைய அட்டைகளை கொடுத்து புதிய சிப் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.
கட்டணங்கள் ஏதுமின்றி வழங்கப்படும் இவ்வட்டையின் மூலமே தான் வருகிற ஜனவரி 1ஆம் திகதி முதல் வங்கி சேவைகளை பெற இயலும்.
எனவே பொதுமக்கள் தங்களின் கணக்கு பரிவர்த்தனை செய்து வரும் வங்கிகளில் புதிய சிப் அடிப்படையிலான கார்டுகளை பெற்று வங்கி சேவையை பெற்றிட கேட்டுக் கொள்கிறோ.