Friday, April 19, 2024

#சிரியா நாம் யாருக்காக வாழ்கின்றோம்?? அம்மா

Share post:

Date:

- Advertisement -

#சிரியா

நாம் யாருக்காக வாழ்கின்றோம்??

அம்மா

நீங்கள் சங்கமித்த நேரத்தில்
உருத் தெரியாதப் பிண்டமாய்
தொடங்கிய நொடியில் இருந்து
உன் அடி வயிறு நிரம்பத் தயாராகிறது
நீ விளைவுகளைப் பற்றி யோசிக்காமல்
உணர்வுகளை உள்ளடக்கி
என்னை உச்சி மோர்ந்துப் பார்க்க
உன் உயிரினைத் திரட்டி
நான் வரும் நாட்களுக்காக
காத்துக்கொண்டு இருக்கின்றாய்
காலம் கனிந்து நான் பிறந்தபோது
நீ கொடுத்த தாய்ப்பாலில்
நம்பிக்கை என்ற சுவையை
மட்டுமே நானறிந்தேன்
ஆனால்
இங்கு யாரோ செய்த தவறுகளுக்கு
எங்களை ஏன் தண்டிக்கின்றார்கள்
எங்களுக்கு விளை நிலமும் வேண்டாம்
விளையாட்டும் வேண்டாம்
யாருமற்ற சூழலில்
நான் யாரை எப்படிக் கூப்பிடுவது
அம்மா என்றா
அப்பா என்றா
அத்தை என்றா
மாமா என்றா
தயவு செய்து இனிமேலாவது
எங்களை விட்டு விடுங்கள்
எப்படி ஒரு துளி உயிரில் உருவம் வருகிறதோ அது போல
எங்கள் சுவாசம் அடங்கும் முன்
என் ஒரு துளி ரத்தத்தில்
யாராவது ஒருவர் உயிர்ப்பிழைக்கட்டும்
அதுவரை என் தாயின் முலைப்பாலில்
கிடைத்த நம்பிக்கையுடன்
சிறிது நேரம் சுவாசித்துக்
கொள்கிறேன். !!!   🙂

 

படித்ததில் மனதில் பிடித்த கவிதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...