தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்.
கொரோனா தொற்று தமிழகத்தில் பரவி வருகிறது,இதனால் மாநில அரசு பல்வேறு சுகாதர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, இந்நிலையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் மல்லிப்பட்டிணம் கடைவீதிகளில் அமைந்துள்ள கடைகள்,பள்ளிவாசல்,பள்ளிக்கூடங்கள், கோயில்கள் என பல பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருகிறது.
இப்பணியில் PDO கோவிந்தராஜன்,DPDO வெங்கடேசன்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம், ஊராட்சி மன்றத்தலைவர் முகமது அலி ஜின்னா,துணைத்தலைவர் மாசிலாமணி,வார்டு உறுப்பினர் பக்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.