மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
பல்வேறு அரசியல் எதிர் கட்சிகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக் கூட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கூடிய தமிழக சட்டமன்றத்தில், தமிழக ஆரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பல தரப்பு மக்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று அறிவித்தது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதனையடுத்து அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டோர் தங்களது வகுப்புகளை புறக்கணித்து தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.