நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடம் அருகே அப்பகுதியில் உள்ள பொறுப்பற்ற சில மக்களால் குப்பை மேடு உருவானது.
இதனை கவனத்தில் கொண்ட அதிரை அய்வா சங்க அமைப்பினர் அப்பகுதியில் சதுர வடிவிலான பெரிய குப்பை கூடை ஒன்றை SDPI மாவட்ட தலைவைர் இலியாஸ் அவர்களின் பொருளாதார உதவியுடன் அங்கு வைத்தனர்.
ஆனாலும் குப்பையை வீதியின் நடுவில் இருந்தே வீசி எரியும் நிலையில் குப்பைகள் சிதறி துர்நாற்றம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் புகார் கூறினர்.
இதனை அடுத்து புதுத்தெருவை சமூக ஆர்வலர் அஸ்லம் நமது அதிரை எக்ஸ்பிரஸை தொடர்புகொண்டு இது குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகோள் விடுத்தார்.
நமது பங்கிற்க்கும் பேரூர் நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற நேரத்தில் , அப்பகுதியை புனரமைப்பு செய்து குடிநீர் கொட்டகை அமைத்த நல்ல உள்ளங்களை அதிரை எக்ஸ்பிரஸ் பாராட்டுகிறது .