இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் இச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது பொது மக்களிடையே பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்லூரி மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற போராட்டம் சுமார் 1 மணி நேரம் வரை நீடித்தது.