Thursday, March 28, 2024

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு வழக்கு !

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ) எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்சில் இவ்வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆனால் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறுவதை காரணம் காட்டி இவ்வழக்குகளை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் கைவிடப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

இந்நிலையில் கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் சி.ஏ.ஏ., அரசியல் சாசனத்துக்கு எதிரானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கேரளா அரசு ஏற்கனவே சட்டசபையில், சி.ஏ.ஏ.வை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் முதல் மாநில அரசும் கேரளாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...