இஸ்லாமியர்கள் மற்றும் ஈழத்தமிழர்களை ஒடுக்கும் விதமாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள CAA, NRC, NPR ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முதல் வருகிற 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடைபெற இருக்கிறது.
அவ்வகையில் பட்டுக்கோட்டை பகுதியில் இன்று காலை ஆலடிக்குமுளை பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் அதிரை பேரூாட்சிமன்ற முன்னாள் தலைவர் அஸ்லம் தலைமையில், திமுக ஒன்றிய பிரதிநிதி அலீம், ஹாஜா முகைதீன், திமுக கழக அதிரை அமைப்பினர் 100க்கும் மேற்பட்ட அதிரைவாசிகள் கலந்து கொண்டனர்.