கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், முதன் முறையாக ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளதால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது எப்படி என, காப்பாகவாசிகளுக்கு விளக்கப்பட்டது.மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் உள்ள, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், 960 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், குணம் அடைந்து, இயல்பான நிலையில் உள்ள, 114 ஆண்கள், 78 பெண்கள் என, 192 பேர், புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், இந்த தேர்தலில், முதல் முறையாக, மனநல காப்பகத்தில், ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளது.
இதனால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது எப்படி என்பதை, காப்பகவாசிகளுக்கு, தேர்தல் அலுவலர்கள், நேற்றைய முன்தினம் பயிற்சி அளித்தனர்.இது குறித்து, காப்பக இயக்குனர், பூர்ணா சந்திரிகா கூறியதாவது:மனநல காப்பகத்தில் உள்ள, 192 பேர், மத்திய சென்னை தொகுதிக்கு ஓட்டளிக்க உள்ளனர். ஓட்டளிப்பது குறித்த முன்னோட்ட பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறினார்.