பின்னர் அங்கு போட்டியா எனப்படும் புதிய ரக பைபர் நாட்டுப்படகை வாங்கிய மறுநாளே புதிய படகின் மூலம் கடல் வழியாக ராமேஸ்வரம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் வந்துகொண்டிருக்கும்போது பகல் 12 மணியளவில் திடீரென படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 11 மீனவர்களும் கடலுக்குள் விழுந்து உயிருக்குப் போராடினர். செந்தில்குமார், காளிதாஸ் என்ற இரண்டு மீனவர்களும் பிளாஸ்டிக் கேனை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மிதந்தனர். மற்ற மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் தற்போது அவர்களின் உடல்களும் இன்று கரை ஒதுங்கியுள்ளது.
இதனையடுத்து தமுமுக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் தஞ்சை தமுமுக தெற்கு மாவட்ட தொன்டரணி செயலாளர் அதிரை கனியுடன் தமுமுகவினர் மற்றும் கடலோர காவல் படையினரும் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.