Thursday, March 28, 2024

கருணாநிதிக்காக அரசு பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை!!

Share post:

Date:

- Advertisement -

கருணாநிதி பயின்ற திருக்குவளை அரசு பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் என்று அவர் படித்த திருவாரூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பிரார்த்தனை செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு நீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரண மாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், திமுக தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர். பல இடங்களில், கருணாநிதி குணமடைய வேண்டிய சிறப்புபூஜைகள் செய்து வருகின்றனர்.

பல பள்ளிகளில் மாணவ மாணவிகள் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கூட்டுப் பிரார்த் தனையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், அவர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்கள் இன்று பள்ளி தொடங்கியதும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும், அதே ஊரில் அமைந்துள்ள முத்துவேளர் அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள மாணவர்க ளும் கருணாநிதி உடல்நலம் பெறவேண்டி கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...