Thursday, March 28, 2024

கஜா புயல் பாதிப்பு தடுக்க வேண்டி பிரத்தியங்கரா கோயிலில் மிளகாயை தீயிலிட்டு யாகம்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், திருவிசநல்லூரில் சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த சிவன் கோயிலில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத பிரமாண்டமான 9 அடி உயர பஞ்சமுக மகாமங்கள பிரத்தியங்கிராதேவி தனி சன்னதி கொண்டுள்ளார்.

வரும் 15ம் தேதி கஜா புயல் தமிழகத்தில் கரை கடக்கலாம் என எதிர்பார்த்து உள்ள நிலையில், புயல் கரை கடக்கும்போது பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் பொதுமக்களையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டி நேற்று நிகும்பலா மகாயாகம் நடந்தது. பக்தர்கள் கொண்டுவந்த வற்றல் மிளகாய்கள் மூட்டைமூட்டையாகவும், யாகத்திற்காக தயாரிக்கப்பட்ட 1008 லட்டுகளையும், ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பல்வேறு பழவகைகள், மூலிகைகள், பட்டுபுடவைகளும் யாகத்தீயில் இடப்பட்டன.

தொடர்ந்து 2 மணிக்கு பூர்ணாஹூதி நடந்து மகாதீபாராதனை நடந்தது. பின்னர் மேளதாளங்கள் முழங்க கடம்புறப்பாடு நடந்து பிரத்தியங்கராதேவிக்கு பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. வளையல் அலங்காரம் செய்வித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. யாகத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...