Friday, March 29, 2024

உயிர் காக்கும் மருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி MLA வலியுறுத்தல் !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸிற்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி MLA வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் நோயை ஒழிக்கும் பணியை இந்தியாவெங்கும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்துவரும் நிலையில், முக்கிய உயிர் காக்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் போன்ற மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது நல்லதல்ல.

மனிதாபிமானம் எல்லையற்றது என்பது உண்மை. அதே சமயம் நமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகே, பிறரின் விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

நமது நாடு உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு அதிக அளவில் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், குறைந்தபட்சம் ஏப்ரல் மாதம் இறுதி வரையிலாவது இது போன்ற உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க கூடாது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிரட்டல் தோணியிலான வேண்டுகோளுக்கு உடனடியாக பணிந்து, உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என்பது நம் நாட்டின் நலன் சார்ந்த அரசியலுக்கு நல்லதல்ல.

நம் நாட்டின் மக்கள் தொகை அளவுக்கேற்ப, இது போன்ற மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்வது அவசியமாகும்.

மத்திய அரசு நம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...