Friday, April 26, 2024

உத்தரப் பிரதேச பொதுதேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை !

Share post:

Date:

- Advertisement -

உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மிகவும் அதிர்ச்சி தரும் விஷயமாக 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ-மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதற்கு முந்தைய காலகட்டத்தில் உயர்நிலைப் பள்ளித்தேர்வில் அதிகப்படியாக காப்பி அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் கெளசாம்பி இடத்தில் உள்ள 13 பள்ளிகளில் எந்தவொரு மாணவ மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை.

இதேபோல், மேல்நிலைப் பள்ளித் தேர்வில் அலிகார், மற்றும் மணிபூரில் தலா 7 பள்ளிகள் பூஜ்ஜிய சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இதனிடையே பள்ளி தேர்வின் போது காப்பி அடிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உத்தரபிரதேச பள்ளிக்கல்வி இயக்குனரான வினய் குமார் கூறியுள்ளார். அதனால் தேர்ச்சி விகிதம் குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

10-ஆம் வகுப்பை பொறுத்தவரை 50 அரசுப்பள்ளிகளும், 5 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 84 தனியார் பள்ளிகளும் 0 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 12-ஆம் வகுப்பை பொறுத்தவரை 15 அரசுப்பள்ளிகளும், 58 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 176 தனியார் பள்ளிகளும் பூஜ்ஜிய சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...