கோயம்புத்தூரைச் சேர்ந்த குதுபுதீன் மற்றும் காதர் ஜஹான் தம்பதியின் மகள் நப்ஸீன் பாத்திமா. இவருக்கு 13 வயதாகிறது. இந்நிலையில் இவருக்கு இருதயத்தில் ஏற்பட்ட நீர் கோர்வையால் மூன்று முறை மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் சிறுமி ஒரு சில மாதங்கள் உடல்நலம் பெற்று இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அச்சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பயந்துபோன அச்சிருமியின் பெற்றோர் மருத்துவரிடம் ஆலோசிக்கையில், அந்த சிறுமிக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அப்படி இல்லையெனில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என கூறியுள்ளார். அறுவை சிகிச்சை செய்ய தற்போது அவர்களுக்கு ரூ. 2 லட்சம் தேவைப்படுகிறது.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய இந்த தம்பதியினர், தங்கள் மகளின் சிகிச்சைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எது எதிலோ செலவு செய்யும் நாம் அந்த இளம் சிறுமியின் சிகிச்சைக்கு உதவலாம். நாம் செய்கின்ற இந்த நிதியுதவி ஒரு இளம் சிறுமியின் மறுவாழ்வுக்கு காரணமாக இருக்கும். எனவே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அச்சிறுமியின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வங்கிக் கணக்கு விவரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பெயர் : காதர் ஜஹான் பீவி
தொலைபேசி எண் :
+91 7092176376
+91 9600707693
கணக்கு எண் :5482101005067/கனரா வங்கி
IFSC CODE:CNRB0005482
Branch: வடமதுரை
குறிப்பு : மேலே உள்ள தகவல் அனைத்தும் அதிரை எக்ஸ்பிரஸால் உறுதி செய்யப்பட்டவை.