தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 15.11.2018 அன்று அடித்த கஜா புயலால் டெல்டா பகுதிகளுக்கு அதிகமாக சேதம் ஏற்பட்டது.
இந்த புயலால் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், பள்ளிவாசல்கள் போன்ற பல பொருட்கள் சேதமடைந்ததோடு அனைத்து உயிரினங்களும் பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் சேதமடைந்த இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று தற்பொழுது பழைய நிலைக்கு திரும்புகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலுள்ள பேருந்து நிலையத்தில் மேற்கூரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அடித்த கஜா புயலில் உடைந்து விழுந்தது.
பேருந்து நிலையம் என்பது அதிகமாக பொதுமக்களும், வாகனங்களும் குவியும் இடமாக இருக்கின்றது.
இந்நிலையில் இரண்டு மாதங்களாகியும் சரிசெய்யப்படாமல் இந்த மேற்கூரை விழுந்து கிடப்பதால் அதிகமான பொதுமக்களும், வியாபாரிகளும், வாகனஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே அதிரை பேருந்து நிலையத்தில் விழுந்து கிடக்கும் மேற்கூரையை உடனே சரிசெய்யுமாறு பொதுமக்கள் சார்பாக அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.