பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதியுடன் முடிந்தன. இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29ல் தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிவடைந்தது.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று 19/04/2019 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட உள்ளது.
அதன்படி மாணவர்கள்,
www.tnresults.nic.in ,
www.dge1.tn.nic.in ,
www.dge2.tn.nic.in
ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர, பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.