மணமேல்குடி -அதிராம்பட்டினம் இடையே ஃபாணி புயல் கரையைக் கடக்கும் என பரவலாக கூறப்பட்டு வரும் இவ்வேளையில் அரசுத்துறை இதுவரை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை.
தொலைக்காட்சி சமூக ஊடகங்களில் வரும் செய்திகளால் அதிராம்பட்டினம் பகுதி வாழ் மக்கள் மிகுந்த அச்சத்தினால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
கஜா புயலின் தாக்கத்திலிருந்து மீளாத மக்களின் மீது இன்னொரு இயற்க்கையின் தாக்குதலா? என இறைவனின் உதவியை நாடி பிரார்த்தனைகள் செய்த வன்னம் உள்ளனர்.
இதனிடையே அதிரை எக்ஸ்பிரஸை செல்போன் வாயிலக அழைத்த மஹ்மூதா என்ற வாசகி அதிரை அருகே மையம் கொண்டுள்ள புயலின் கோரத்தாண்டவத்தை நீர்த்து போக வைக்க கூடிய வல்லமை இறைவனிடம் மட்டுமே உள்ளது என்றும் , இதனை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை அவசர ஆலோசனை செய்து அனைத்து பள்ளிவாசல்களிலும் அனைத்து தொழுகைகளிலும் குனூத் எனும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுப்பட சுற்றறிக்கை அனுப்ப வேண்டுகோள் விடுத்தது உள்ளார்.