ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிறருடைய தூண்டுதலின் பேரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் முன்னறிவிப்பு மற்றும் அனுமதி பெறாமல் கடந்த 23ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை குறித்த பிரச்னைக்கு ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாக தீர்வு எட்டப்படும். அதனால் இந்த வாக்குறிதியை ஏற்று ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்