அதிராம்பட்டினம் அதிகளவில் இஸ்லாமிய மக்களை உள்ளடக்கிய பேரூராகும்.
முன்னதாக இவ்வூரில் பெரிய ஜும்மா பள்ளி உள்ளடக்கிய 7பள்ளிகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடைபெற்று வரும் இவ்வேளையில் புதிதாக மெயின் ரோடு அல் அமீன் ஜாமியா மஸ்ஜிதில் புதிதாக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடத்த வேண்டும்.என அப்பகுதி வியாபாரிகள்,முஹல்லாவாசிகள் தொடர் கோரிக்கையை வைத்து வந்தனர்.
இது குறித்து பரிசீலனை செய்த நிர்வாகத்தினர் வெளியூர் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இப்பள்ளியில் ஜும்ஆ தேவை என்பதை உறுதி செய்து விட்டாலும், ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் ஒற்றுமையாக மசூரா செய்து முடிவெடுக்கலாம் என கருத்தில் கொண்டு அதற்க்கான அழைப்பிதழை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.
எனவே இந்த மசூராவில் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க ஹிமாயத்துல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.