Friday, April 19, 2024

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது…. ஒருவர் பலி!!

Share post:

Date:

- Advertisement -

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் ஒருவர் அங்கு ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்தவர்களை பிணைக் கைதியாகப்பிடித்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் அதிவேகமாக வந்து கடையின் முகப்பை உடைத்து நொறுக்கிய அவன், தன்னை துரத்திய பாதுகாவலர்களையும் போலீசாரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான். இதனால் கடையில் ஷாப்பிங் செய்தவர்கள் அலறியடித்து ஓடினர்.சிலர் ஜன்னல் வழியாக குதித்து தப்பியோடினர். பிணைக்கைதியாக சிலரைப் பிடித்து வைத்த அவன் ஒரு பெண்ணை சுட்டதில் அவர் காயம் அடைந்தார்.

காயம் அடைந்தவரை போலீசார் கடைக்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மர்மநபர் சரமாரியாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக அந்த மர்ம நபர் குடும்பத் தகராறில் தனது பாட்டியையும் காதலியையும் சுட்டுவிட்டு காரில் வேகமாக வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...