அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி அணியினரும் புதுக்கோட்டை FC அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி அணி 2-0 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளையதினம்(23/07/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :
விவேகானந்தா 7s பட்டுக்கோட்டை – MFC மேலநத்தம்