அதிரை வெஸ்டர்ன் கால்பந்து கழகம் சார்பாக 9 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய கருத்தம்மா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு இத்தொடர் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இன்றைய தினம்17 வது போட்டியில் கௌதியா 7’s நாகூர் – SSNFC காரைக்குடி அணிகள் களம் கண்டன.
சமபலம் வாய்ந்த இரு அணிகளும் முதல் கோல் அடிப்பதற்க்கு முன்னேறிய போதும் மிக எளிதாக நாகூர் அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.
இருப்பினும் சற்றும் சளைக்காமல் விளையாடிய காரைக்குடி அணி முதல் தனது கோலை அடித்து நாகூர் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.
முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்கிற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.
பின்னர் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் காரைக்குடி அணி தனது இரண்டாவது கோலை அடித்து முன்னிலை பெற்றது.
சீரான இடைவெளிகளில் நாகூர் அணிக்கு கோல் அடிப்பதற்கு பல வாய்ப்புகள் கிடைத்தும் அதனை நாகூர் அணி வீண் செய்தது.
இறுதியில் காரைக்குடி அணி 2-1 என்கிற கோல் கணக்கில் நாகூர் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
நாளைய தினம் Balu & Kanakaraj திருச்சி – காரைக்குடி அணிகள் மோத உள்ளனர்.