SDPI கட்சி சார்பில் அதன் அதிரை நகர தலைவர் சாபிர் அஹமது இன்று அதிரை மின்வாரிய அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில், அதிரை கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சமீபத்தில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டது. இது அங்கு பயிலும் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அங்கு உள்ள மின்மாற்றியை அகற்றி வேறொரு இடத்தில் வைக்க வேண்டும் என அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.