அதிரை ABCC அணி நடத்திய மாபெரும் மின்னொளி கிரிக்கெட் தொடர் நேற்று இரவு முதல் நடந்தது.
நேற்று இரவு முதல் துவங்கிய இப்போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின.
இந்த அணிகளில் அதிக அணிகளை வென்ற அதிரை WCCஅணியினர் இறுதி சுற்றுக்கு முன்னெறினர்.
இந்நிலையில்,இப்போட்டிக்கான இறுதி சுற்று இன்று மாலை சுமார் 4:30மணியளவில் துவங்கியது.இப்போட்டியில் WCC அணி மற்றும் ABCC அணியும் மோதின .
இப்போட்டியில் அதிரை WCC அணியினர் 89ரன்கள் அடித்து முதல் பரிசு மற்றும் கோப்பையை வென்றனர்.
WCC அணி முதல் பரிசையும்(ரூ.15,000) , ABCC அணி இரண்டாம் பரிசையும்(ரூ.11,000) , ASC அணி மூன்றாம் பரிசையும்(ரூ.7,000) , ABCC B அணி நான்காம் பரிசையும்(ரூ.5,000) தட்டிச்சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.