தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் S.S. பழனிமாணிக்கம், வாக்களர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று அதிரை வந்தார்.
மக்கள் மத்தியில் உறையாற்றிய அவர், அதிராம்பட்டினம் மக்கள் தன் மீதும் திமுகவின் மீதும் மாறா பற்றுக்கொண்டவர்கள் என்றும் நான் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வாக்குகளை இவ்வூர் மக்கள் வாரி வழங்கிய மக்களை சந்திக்க வேண்டும் என அவா தோன்றியது அதன் பொருட்டே முதலாவதாக இங்கு வந்துள்ளேன் என்றார்.
முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினரை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கம்யுனிஸ்ட்டுகள், மமக, மஜக, விசிகவினர் வரவேற்றனர்.
இறுதியாக வேட்பாளரை வாழ்த்தும் நிகழ்வு நடைபெற்றன. இதன் பின்னர் கூட்டனி கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுக்க வேட்பாளர் அழைப்பு விடுத்தார். அப்போது முஸ்லீம் லீக்கை விடுத்து அனைத்து கூட்டணி நிர்வாகிகளும் ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகி ஒருவர் முஸ்லீம் லீக் எங்கே முஸ்லீம் லீக் எங்கே என வினவ அவர்கள் யாரும் வரவில்லை என கூறியுள்ளனர்.
கூட்டணி கட்சிகளுக்கு முறையாக அழைப்பு விடுத்தும் முஸ்லீம் லீக் கலந்துக்கொள்ளாதது ஏன் ? என முஸ்லீம் லீக் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர் !