தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரவி சங்கர் இவர் பட்டுக்கோட்டை R.V. நகர் NGO காலனியில் உள்ள தனது வீட்டின் வாயில் அருகே இன்று காலை தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார். பணிமுடிந்து மாலையில் வீடு திரும்பி பார்த்தபொழுது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே இவர் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். காவல்துறையினர் காணாமல் போன இருசக்கர வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர். வண்டியின் புகைப்படமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பதிவெண் கொண்ட இவ்வண்டியை கண்டவர்கள் கீழ்க்காணும் உரிமையாளரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வண்டியின் விவரங்கள் :
வண்டி மாடல் – யமஹா FZ 2015 மாடல்
நிறம் – சிகப்பு
வாகன பதிவெண் – TN 49 BY 9582
உரிமையாளர் விவரம் :
பெயர் – ரவி சங்கர்
முகவரி – NGO காலனி , RV நகர் , பட்டுக்கோட்டை
தொலைபேசி எண் – 9442178514