தஞ்சை மாவட்டம்:-அதிராம்பட்டினம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிரையின் முக்கிய பகுதியான CMPலைன் சாலையில் உள்ள குப்பை கூண்டுகளிலும், வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகாமையில் உள்ள குப்பை கூண்டிலும் குப்பைகள் ஒரு வாரகாலமாக குப்பைகள் அல்லப்படாததால் பெரும் துர்நாற்றத்துடன் டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல் போன்ற கொடூர நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல்,அதிரை தக்வா பள்ளிவாசல் பின்புறம் உள்ள குப்பை கூண்டு உடைந்து உள்ளது.
இதனால் குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கும் நிலையால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை அதிரை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா..?