Thursday, April 18, 2024

அதிரை பேரூராட்சிக்கு சவால்விடுமளவிற்கு களப்பணியாற்றும் கடற்கரைத்தெரு இளைஞர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் கடற்கரைதெரு பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் வடிகாலில் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் நிரம்பி காணப்படுவதால் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் சாக்கடை நீர் வெளியேறி சாலையில் வழிந்தோடும் நிலையில் இருந்தது.

இதன்காரணமாக சாக்கடைநீர் வெளியேறுவதால் சுகாதர சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் வண்ணம் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சிறுவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.மேலும் பேரூராட்சியின் முறையான பராமரிப்பின்றி இருந்ததால் கழிவுநீர் வடிகால் என்பதற்கான அடையாளமே இல்லாமல் சாக்கடைநீர் செல்லக்கூடிய பரவலான இடங்களில் சேதமடைந்து இருந்தது.
அதிரை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்கும் என்றே எதிர்ப்பார்த்தவர்களுக்கு எப்போதும் போல் ஏமாற்றமே பதிலாக இருந்தது.

இதனையடுத்து கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர்கள் நற்பணிமன்றத்தினர் இதற்கான நிதிஉதவியை  பெற்று   ஆட்களை வைத்து பல ஆண்டுகளாக சேதமடைந்த வடிகால்களை  மறுசீரமைப்பு செய்து,சாக்கடை நீர் சாலைகளில் நிரம்பி வெளியேறாமல் இருப்பதற்காக நீண்ட குழாய்களை அமைத்தனர்.

அரசுநிர்வாகம் செய்யக்கூடிய பணிகளை தொடர்ந்து அதிரை இளைஞர்கள் செய்து வருவது மற்ற மற்ற ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு முன்னுதாரணமாகவும்,ஆர்வத்தையம் ஏற்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...