தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ். எஸ். பழனிமாணிக்கத்தின் வெற்றிக்கு கூட்டனி கட்சிகள் போட்டி போட்டுகொண்டு வாக்கு சேகரிப்பில்.கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுகவின் மாவட்ட இலக்கிய அணியின் செயலாளராக உள்ள பழஞ்சூர் செல்வம் உற்சாகமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு கொண்டிருந்த வேலையில் அவரை தேர்தல் பணியாற்ற கூடாது என கட்டளை பிறப்பித்து உள்ளதாக எமக்கு தகவல் வந்துள்ளன.
இது ஏன்…நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு…. அப்டீன்னு களத்தில் குதிச்சி ஆராய ஆரம்பித்தோம்.
அதில் கிடைத்த தகவல்கள் தலைசுற்றலை ஏற்படுத்தி விட்டன.
அதாகப்பட்டது, தேர்தலுக்கான நேர்காணல்ல பழஞ்சூர் செல்வர் ஒரு நபருக்கு டொனசன கொடுத்து தஞ்சைக்கு சீட்டு கேளுப்பான்னு சொல்லி இருக்காரு, அந்த ஆளும் தலைமையில நடந்த நேர்காணல்ல கலந்துகிட்டாரு ஆனா வய்ப்பு கிடைகக்கல.
அத வந்து ஒரு அரசியல் சானக்கியர் வேட்பாளர் காதில் ஊதிவிட கடுப்பான வேட்பாளர் களப்பபணி ஆற்றக்கூடது என கண்டிசனா சொல்லிட்டாராம் !
இப்போ டவுட்டு என்னான்னா…?
இதுநாள் வரையிலும் இலக்கிய அணியில் இருந்துக்கொண்டு நல்ல பல பணிகளை செய்துவரும் இவரை கழட்டிவிடும் அளவிற்க்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லையே ஏன் இப்பிடி? என ரொம்ப ஆழமாக யோசிச்சா….
யாரையோ திருப்திபடுத்த பழிகிடாவாக செல்வத்தை பயன்படுத்தப்பட்டு உள்ளனரா என தொண்டர்கள் என்னத்தொடங்கிவிட்டனர்.
காரணம் சமிபகாலமாக அதிரை திமுகவில் வானளாவிய ஒற்றுமையை காண முடிகிறது….
இது எதுல போய் முடியும் தேர்தல் முடிவிலா…. அல்லது அதற்க்கு முன்னரா?
வெயிட்டிங்கில் உள்ளூர் ரரக்கள்!