தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் பேரூராட்சி துப்புரவு பணியளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
கஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் நேற்று (ஜன 12) வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியினை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.MK.முகமது சம்சுதீன்,செயளாலர் Rtn.அகமது மன்சூர், பொருளாளர்,Rtn.S.சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பொங்கல் பரிசாக அரிசி,கரும்பு, கைலி,போர்வை,பாய்,மெழுகுவர்த்தி, டவல் ஆகியவை கொண்ட தொகுப்பு அனைவருக்கும் வழங்கி பாராட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி துப்பரவு ஆய்வாளர் அன்பரசன், துப்பரவு மேற்ப்பார்வையாளர் வெங்கடேசன்,மற்றும் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள்,மாவட்ட பிரதிநிதிகள் Rtn.PP.PHF.M.நடராஜன் P.P.Rtn.K.வைரவன்,Rtn.M.முகமது தமீம்,Rtn.நவாஸ் கான்,மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்.