தஞ்சை மாவட்டம்
அதிராம்பட்டினம் திராவிட முன்னேற்ற கழகம் நகர உறுப்பினர்கள் கூட்டம் நேற்று(31/01/2018) மாலை 5மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டம் அதிரை அண்ணா படிப்பகத்தில் பேரூர் கழக அவைத்தலைவர் சாகுல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திமுக ஒன்றிய செயலாளர் இராமநாதன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், திமுக நகர தலைவர் இராம.குணசேகரன், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சபிர், மீனவர் அணி அமைப்பாளர் நாகராஜன், ஒன்றிய சிறுபாண்மை அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கீழ்காணும் தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன:
1.வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல்
2.மார்ச் 01ஆம் தேதி செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுவது.
3.பல முறை கோரிக்கை வைத்தும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யாத தமிழக அரசுக்கு கண்டனம்.
4. பிப்ரவரி 3ஆம் தேதி வரும் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு இரங்கல் தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது.