நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று வருகின்றனர்.
இதில் முதற்கட்டமாக திமுகவின் பிரச்சார கூட்டம் நாளை திருவாரூரில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக அதிராம்பட்டினம் பேரூர் நகர செயலாளர் இராம. குணசேகரன் அவர்கள் ஒருங்கிணைப்பில் அதிராம்பட்டினத்தில் உள்ள கூட்டணி கட்சி கிளை நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, இந்திய காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இந்த நிகழ்வை அடுத்து தஞ்சையில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் நீலமேகம் மற்றும் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் SS. பழனிமாணிக்கம் ஆகியோரை ஆதரித்து கூட்டணி கட்சியின் தலைவர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிரை நகர கூட்டணி கட்சி கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் வெகுவாக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.