அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த ஹாலிக் மறைக்கா ! உடலால் ஊணமிருந்தாலும் உள்ளத்தில் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ளார்.
அப்படி என்னதான் செய்தார் இந்த ஹாலிக் ?
அரசுத்துறை கண்களுக்கு புலப்படாத(!) அதிரையின் அடிப்படை வசதிகளான சாலை மேம்பாடு , மின் தொடர்பான புகார்கள் , தெருவிளக்கு , குடிநீர் , வடிகால் வசதி உள்ளிட்ட மக்களின் தேவைகளை உடனுக்குடன் அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் புகாருக்கு பின் செயல்படாமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகளை அலரவிடும்படி நாளிதழ்களுக்கு இது குறித்த தகவல்களை பதிய செய்து விடுகிறார்.
இதனால் மாவட்ட நிர்வாகத்தின் கொட்டு உள்ளூர் அதிகாரிகளுக்கு உறுதியாகி விடுகிறது.
இதனாலேயே ஹாலிக் மரைக்காவின் புகாரை அதிகாரிகள் மறைக்க முற்படுவதில்லை.
இவரின் சமூக தொண்டை பாராட்டி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிரை பைத்துல்மால் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற குர்ஆன் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில் இவருக்கு ரொக்க பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.!