Thursday, March 28, 2024

அதிரை காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

★பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்பொழுது அது குறித்த விபரத்தை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினால் உங்கள் வீடு உள்ள பகுதி கண்காணிக்கப்படும்.

★விலை உயர்ந்த பொருட்கள், தங்க நகைகளை வீட்டில் வைப்பதை விட வங்கி லாக்கரில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

★இரவு நேரத்தில் வீட்டிற்கு முன்புறம் முகப்பு விளக்கை எரியவிட்டு உறங்கினால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டங்கள் இருப்பதை அறிய எளிதாக இருக்கும்.

★பகல் நேரங்களில் விற்பனையாளர்கள் போல், குறிப்பாக அயல் மாநிலத்தவர்கள் போன்ற நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். அப்படி யாரேனும் சந்தேகப்படும்படி இருப்பின் உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்கவும்.

★வேலை காரர்கள் மற்றும் இதர நபர்களிடம் பண விபரம், வெளியூர் செல்லும் விபரம் பற்றி பேச வேண்டாம்.

★பீரோவ், வீட்டை பூட்டிவிட்டு சாவியை அருகில் வைக்க வேண்டாம்.

★முன் பின் தெரியாத நபர்கள் உங்களிடம் உதவி நாடி வந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

★இரவில் உறங்கும்பொழுது காற்றோட்ட வசதிக்காக வெளிகதவையோ, ஜன்னல் காதவையோ திறந்து வைக்கக்கூடாது.

★இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பு இல்லாத இடத்தில் நிறுத்த வேண்டாம்.

காவல் ஆய்வாளர், அதிராம்பட்டினம்.

தொடர்புக்கு: 9498159678,
04373 – 242450.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...